கோவில் கட்டிட கலை :
=> ஆகமங்களில் கோவில்களின் அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும்
என்று கூறப்பட்டுள்ளது
=> மயமாதம் , மானசாரம் எனும் நூல்களை மாயன் என்பவர்
எழுதியுள்ளார் . இதில் கோவில்கள் கட்டிட அமைப்பு பற்றி
கூறப்பட்டுள்ளது
3வகை கோவில்கள் :
1. நாகரம் - மத்திய இந்தியாவில் இவ்வகை கோவில்கள் உள்ளது
2. வேசரம் - கிருஷ்ண to நர்மதா வரை உள்ள கோவில்கள்
இவ்வகையது
3. திராவிடம் - தமிழ்நாடு ( நெல்லூர் கிருஷ்ணா to கன்னியாகுமரிவரை )
கோவிலின் அங்கங்கள் :
1. கருவரை - கடவுள் அமைந்திருக்கும் இடம்
2. அர்த்தமண்டபம் ,
முகமண்டபம் ,
முன்மண்டபம் - கருவறையின் முன் பகுதி
3. அந்தராளம் / இடைநாளி - கருவறையும் முன்மண்டபத்தையும் இணைப்பது
4. வாகன மண்டபம் - வாகனங்கள் வைக்கும் பகுதி
5. நூற்றுக்கால் மண்டபம்
6. ஆயிரம்கால் மண்டபம்
7. கல்யாணமண்டபம் - இறைவனுக்கு திருக்கல்யாணம் நடைபெறும் பகுதி
8. வசந்தமண்டபம் - கோடைகால வசந்தவிழா நடைபெறும் இடம்
9. பள்ளியறை - கடவுள் சயனிக்கும் இடம்
10 . மடப்பள்ளி - அன்னதான உணவு சமைக்கும் இடம்
12. விமானம் - கருவறையின் அமைப்பு
13. கொடிமரம் ( துவஜஸ்தம்பம் )
கோயில் கட்டிடக்கலை மற்றும் சிற்பங்கள் :
கோவில் தத்துவங்கள் :
கோபுரம் - கோவிலின் நுழைவாயிலை அமைந்திருப்பது
- பாதமாக கருதப்படுகிறது
- பல்லவர்காலத்திற்கு பின் கோபுரம் அமைக்கும் முறை
ஏற்பட்டது
கொடிமரம் - மஹாஉற்சவம் நடைபெறும் கோவில்களில் கொடிமரம்
அமைக்கப்பட்டிருக்கும்
- அறியாமையை கோடியில் ஏற்றி உயிர்களை சூழ்ந்துள்ள
இருளை நீக்கம் செய்வது .
பலிபீடம் - தான் எனும் ஆணவத்தை பலியிடுதல்
நந்தி - சுத்த ஜீவாத்மா .
- இறைவனிடம் சரணடைவது .
- அறியாமை , பாசம் ஆகியவற்றின் அடையாளம் இது
கருவறை - மனித இதயம்
" தன்னை வழிபடும் தன்னிகரில்லா முறை " - திருமூலர்
2வகை சிவ ஆலயங்கள்
1.சரீர பிரஸ்தரம்
தன் மனதுக்குள் கோவில்கட்டி பூஜை செய்வது சரீர பிரஸ்தரம் எனப்படும் . பூசல நாயர் , கைலாய நாதர்ருக்கு தன் மனதுக்குள் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர்
2. இருதய பிரஸ்தரம்
இம்முறையில் அமைக்கப்பட்ட கோவில் சிதம்பரம் நடராஜன்
கோவில்
" உள்ளம் பெரும் கோவில் ஊன் உடம்பு ஆலையம் " - திருமந்திரம்
கோவிலை பிரதிஷ்டை செய்தவர்கள் அடிப்படையில் கோவிலின் வகைகள் :
1. தைவீகம் - தேவர்கள் கட்டியது
2. மானுசம் - மனிதர்களால் கட்டப்பட்டது
3. ஆஸுரம் - அசுரர்களால் கட்டப்பட்டது
4. ஆர்சம் - ரிஷிகளால் கட்டப்பட்டது .
விமானங்களின் அமைப்பு :
* ஒருசுவர் கருவறை நிரந்தரா என அழைக்கப்படுகிறது
* இருசுவர் கருவறை சாந்தாரா என அழைக்கப்படுகிறது
=> இருசுவர் கருவறை கொண்டு எழுப்பப்பட்ட விமானத்தினை கொண்ட
கோவில் தஞ்சை பெரியகோவில்
விமானங்களில் உறுப்புக்கள் -
* உபபீடம்
* அதிட்டானம்
* பித்தி
* தேவகோட்டம்
* கர்ணகூடு
* கும்பபஞ்சரம் பிரஸ்தரம்
* கழுத்து அல்லது கண்டம் ,
* சிகரம் ,
* மகுடம் அல்லது இஸ்தூபி .
" சடங்க விமானம் " = 6 முக்கிய உறுப்புகளை கொண்ட விமானம்
1. அதிட்டானம்
2. பித்தி
3. பிரஸ்தரம்
4. கண்டம்
5. சிகரம்
6. இஸ்தூபி
கோவிலின் வகைகள் :
1. பெருங்கோவில் :
கோவிலுக்குண்டான அனைத்து பகுதிகளையும் கேட்டிருக்கும்
2. கரக்கோவில்
* மரப்பலகை மற்றும் புல்கீற்றினால் வேயப்பட்டிருக்கும்
* சாலை ,அர்த்தசாலை ,மற்றும் கூடாரம் ஆகிய பகுதிகள்
கொண்டது
* உதாரணம் தில்லை சிற்றம்பலம்
* கேரளாவில் பெரும்பாலான கோவில்கள் இவ்வகையை
சார்ந்தது
* கடம்பூர் கோவில் இவ்வகையே
3. ஞாழற்கோவில்
* மேடைக்கோவில்
* சிறுசிறு மரம் சேர்ந்து கூடாரம்போல் அமைக்கப்பட்டிருப்பது
* 1000 கால் மண்டபத்திற்கு முன்னோடி
4 . கொகுடி கோவில்
* முல்லைக்கொடியால் சூழப்பட்ட கோவில்
5. இளங்கோவின்
* பாலாலயம் என அழைக்கப்படுகிறது
* கர்ப்பகிரகம் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும்
6. மணிக்கோவில்
* வண்ணம் தீட்டிய சிற்பங்கள் கொண்டிருக்கும்
* திருமுறைக்கோவில் என அழைக்கப்படுகிறது
* பெரியகோவிலில் உருத்திராக்கம் போன்ற மணிகாலால்
அமைக்கப்பட்டிருக்கும் சன்னதிகள் மணிக்கோவில் என்பர்
7. ஆலக்கோவில்
* " ஆழம் " நீர்சூழ்ந்த இடம்
* நாலாபுறமும் நீர் சூழ்ந்திருக்கும் பகுதிக்குள்
அமைக்கப்பட்டிருக்கும்
8 . மாடக்கோவில் .
* யானை ஏறமுடியாதவாறு படிகள் அமைந்திருக்கும் கோவில்
மாடக்கோவில்
9. தூங்கானை மாடக்கோவில்
* கஜபிருஷ்டம் போன்றது
* தூங்குகின்ற யானையின் அமைப்பை போன்று
அமையப்பட்டிருக்கும்
* இவ்வாறு அமைக்கப்பட்ட கோவில் திருப்பேனாகரம்
10. தாளக்கோவில்
* மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் கோவில்
தலைக்கோவில் எனப்படும்
கோவில் சிற்பங்கள் :
பஞ்சலோக சிலைகள் :
( ஐந்து உலோகங்கள் )
1. தங்கம்
2. வெள்ளி
3. செம்பு
4. துத்தம்
5. ஈயம்
ஆகிய ஐந்து உலோகங்களை கொண்டு செய்யப்பட்ட சிலை பஞ்சலோக சிலை என அழைக்காடுகிறது
=>சிற்பம் என்பது ஒரு முப்பரிமாண கலைப்பொருள் ஆகும்
சிற்பங்கள் செய்ய பயன்படுத்த படும் பொருட்கள்
கற்கள்
உலோகங்கல்
மரம்
மண்
சிற்பங்களை வடிப்பவனை சிற்பி என்பர்
சிற்ப வகைகள் :
1. முழு உரு சிற்பம் :
* நாற்புறமும் பார்க்கும்படியாக அமைக்கப்பட்டிருப்பது
2. புடைப்பு சிற்பம்
* சுவரிலிருந்து புடைத்திருக்கும்
* ஒருபுறம் மட்டும் வடிக்கப்பட்டிருக்கும் .
இது சுவர் , பறை , தூண் ஆகியவற்றில் வடித்திருப்பர்
3. செதுக்கு சிற்பம் :
* உலோகம் அல்லது பொருளை தேவையற்றதை நீக்கி
வடித்திருப்பர்
சிலை செய்யும் விதிமுறைகள் மற்றும் பஞ்சலோகம் பற்றி கூறப்பட்டுள்ள நூல்கள்
* சில்பசாஸ்திரம்
* மனசார
* அபிலா சித்தார்த்த சிந்தாமணி
விக்ரகங்கள் :
கோவிலில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் விக்ரகங்கள் எனப்படும்
கோவில் குளங்கள் :
* மலை நீரை சேமிப்பதற்காக மன்னர்கள் கோவில் கட்டும்பொழுது
அருகில் குளங்களையும் தோன்றியுள்ளனர்
* இறைவன் நீட்டாடுவதற்காகவும் புண்ணிய தீர்த்தத்திற்காகவும்
குளங்கள் அமைக்கப்பட்டன
* மிகப்பெரிய கோவில் குளங்கள் கும்பகோணம் கமலாலயம் ஆகும்
குளங்கள் ஈசானிய முலையில் அமைவது சிறப்பு
* கோவில் பிரகாரத்தின் உள்ளேயும் வெளியேயும் அமைக்கலாம்
* கோவிலின் வெளிப்புறத்தில் சற்று தள்ளி
அமைக்கப்பட்டிருப்பத்திற்கு உதாரணம் மதுரை மீனாட்ச்சி அம்மன்
கோவில் ஆகும்
ஸ்தல விருட்க்ஷம் :
* அரசமரம்
* வில்வமரம்
* ஆலமரம்
* வேப்பமரம்
* வாழைமரம்
=> அரச மரம் தெய்வீக மரம் , போதிமரம் , அசுவதம் எனவும்
அழைக்கப்படுகிறது
=> மரத்தில் வேர் பகுதி பிரம்ம
=> மரத்தின் தண்டுப்பகுதி விஷ்ணு
=> மரத்தின் கிளை பகுதி சிவன்
=> வில்வமரம் லக்ஷ்மிமரம் எனவும் அழைக்கப்படுகிறது
=> வேதகாலங்களின் வெப்பமரத்தினையே கடவுளாக வணங்கினர்
---------------------------------------------------------------------------
இசை :
முத்தமிழ் = இயல் இசை , நாடகம்
சங்கீத மும்மூர்த்திகள்
1. சியாமளா சாஸ்திரிகள்
2. தியாகராஜ சாஸ்திரிகள்
3. முத்துசாமி தீக்ஷிதர்
இந்துஸ்தானி இசை என்பது பாரசீகமும் அரேபியமும் இசைந்து வருவது
ஏழிசை :
1. குரல்
2. துத்தம்
3. கைக்கிளை
4. உழை
5 . இழி
6. விளரி
7. தாரம்
இசையின் ஆதாரங்கள் " சப்தசுரங்கள் " கர்நாடக இசை
ஸ - ஷாட்ஜம்
ரி - ரிஷபம்
க - காந்தாரம்
ம - மத்யமம்
ப - பஞ்சமம்
த - தைவதம்
நி - நிஷாதம்
நாட்டியம் :
தமிழ்நாடு - பரதநாட்டியம்
கேரளம் - கதகளி , மோஹினி ஆட்டம்
ஆந்திர - குச்சிப்புடி
மணிப்பூர் - மணிப்பூரி
ஒரிசா - ஒடி சி
உத்திரபிரதேசம் - கதக்
அசாம் - சாற் றியம்
படதநாட்டியும் பழைய பெயர் : சதிர் கச்சேரி
தாசியாட்டம்
சின்னமேளம்
பா - பாவம்
ர -ராகம்
த தாளம்
பரத முனிவர் உலகிற்கு அருளியதால் இப்பெயர் பெற்றது என்பர்
----------------------------------------------------------------------------
ஸ்தல புராணங்கள் :
தஞ்சை பெருவுடையார் கோவில் :
* 1000 ஆண்டுகள் பழமையானது
* இராஜராஜசோழனால் கட்டப்பட்டது
* " தட்சிணமேரு " என அழைக்கப்படுகிறது
* கட்டிடக்கலை , சிற்பக்கலை , ஓவியக்கலை ஆகிய மூன்று
கலைகளும் ஒருங்கே அமைந்ததுள்ளது
* UNESCO அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது
* ASI பாதுகாப்பின் கீழ் உள்ளது . ( ASI - ARCHIYALOGICAL SERVEY OF
INDIA ) மத்திய தொல்லியல் பாதுகாப்பு துறை
* சதுர வடிவ கருவறை கொண்டது
* 216 அடி உயர விமானம் கொண்டது
* சிகரம் திராவிட வகையை சார்ந்தது
* கழுத்துப்பகுதி 20 மீட்டர் சதுர பரப்பு கொண்ட பிரம்மா மந்திர
கல்லால் ஆனது
* சிகரம் ஆரஞ்சு பலம் போன்று 8 கற்கள் இணைந்தது , ஒரு கல்
ஒவ்வொன்றும் ஒரு டன் எடை கொண்டது .
* கருவறை சாந்தாரா வகை சுவர்களை கொண்டுள்ளது
-----------------------------------------------------------------------------------
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் :
* 2000 ஆண்டுகள் கொண்ட மிக பழமையான கோவில்
* கி . பி . 7ம் நூற்றாண்டு திருஞானசம்மந்தரால் பதிகம்
பாடப்பட்டபொழுது அங்கு இருந்தது சிவபெருமான் மட்டுமே.
கற்கோவிலாக இல்லை . மடதளியாக மட்டுமே சிவபெருமான்
இருந்தார்
* முற்கால பாண்டியர்கள் சிறிய அளவிலான கோவிலை காட்டினார் ,
பிற்கால பாண்டியர்கள் பெரிய அளவிலான கோவிலை காட்டினார்
* கி.பி.12ம் நூற்றாண்டு பாண்டிய மன்னர் மீனாக்ஷிக்கு பெரிய அளவில்
தனி கோவிலை அமைத்தார்
மாலிக்கபூர் படையெடுப்பு :
டெல்லியை ஆட்சிபுரிந்த அலாவுதீனின் படைத்தளபதியாக மாலிக்கபூர் கி.பி.1413 ம் நூற்றாண்டு படையெடுத்துவந்து மதுரை மீனாட்சி கோவிலை தாக்கினர் .
அதில் தப்பியவை : சுந்திரபாண்டியன் கோபுரமும் ( கிழக்கு கோபுரம் )
பராக்கிரம பாண்டிய கோபுரம் ( மேற்கு கோபுரம் )
தற்போதைய கட்டிடங்கள் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது ( கி.பி. 16 - 17 )
மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரருக்கு தனித்தனியாக கோவில்கள் உள்ளது .
இரசித்த சபை / வெள்ளியம்பலம் :
வலக்காலை தூக்கி இடக்காலை ஊன்றி இருப்பதற்கு மாறாக இடக்காலை தூங்கி வலக்காலை ஊன்றிய வண்ணம் இங்கு நடராஜர் கட்சி அளிக்கிறார் .
திருவிழா வீதிகள் : ஆடிவீதி
ஆவணிவீதி
மாசிவீதி
சித்திரை வீதி
----------------------------------------------------------------------------
ஸ்ரீ ரங்கம் :
* 108 திவ்ய தேசங்களுள் முதன்மையானது
* " பூலோக வைகுண்டம் " என அழைக்கப்படுகிறது
* 10 ஆழ்வார்களால் பாடப்பட்ட ஸ்தலம் இது
* வைகுண்டத்தில் இருக்கக்கூடிய விரஜா நதிக்கு இணையாக இங்கு
ஓடும் காவிரி கருதப்படுகிறது
* ஏழு திருசுற்றுகள் கொண்டுள்ளது
* 18 புராணங்களும் ஒன்றான பிரும்மாண்ட புராணத்தில் ஸ்ரீரங்கா
மஹாத்திமம் சொல்லப்பட்டுள்ளது
* இக்கோவில் இஷ்வாகு மன்னரால் முதன்முதலில் கட்டப்பட்டது
* தொண்டரடிபொடியாழ்வார் இக்கோவிலில் நந்தவன கைங்கர்யம்
செய்துவந்தார்
* ஸ்ரீமந்நாதமுனிகளால் அரையர் சேவை அரண்பிக்கப்பட்டு
இன்றுவரை நடந்து வருகிறது .
அரையரசேவை :
திவ்ய பிரபந்தங்களை ராகாதலங்களோடு பாடும் சேவை
தெற்கு ராய கோபுரம் :
* 400 ஆண்டுகளுக்கு முன்பு முற்று பெறாத தெற்கு ராய கோபுரத்தை
காட்டினார்
* 44வது பட்டம் ஸ்ரீமர் அழகியசிங்கர் ஜீயர் சுவாமிகள் 23 அடி உயரத்தில்
இக்கோபுரத்தை கட்டிமுடித்தார் .
----------------------------------------------------------------------
சிதம்பரம் நடராஜ பெருமான் :
இருதய பிரஸ்தர கோவில்
பிரகாரம் : உடல்
கனக சபை : இதயம்
கனகசபை
* நேரடியாக நுழைவாயில் கிடையாது
* வலது & இடப்புறம் வாயில் உள்ளது
* ஐந்து படிக்கட்டுகள் = பஞ்சராத்திர மந்திரத்தை குறிக்கிறது
சதுர வடிவ ஜன்னல் துளை : 96 தத்துவங்களை குறிக்கிறது
தூண்கள் :
4 தூண் = 4 வேதங்கள்
6 தூண் = 6 தர்சனங்கள்
18 தூண் = 18 புராணங்கள்
26 தூண் = 26 சிவாகமங்கள்
21000 தங்கத்தகடு கூரை - ஒரு நாளில் மனிதனின் சுவாசத்தை குறிக்கும்
அதில் வேயப்பட்ட 72000 ஆணி - மனித உடம்பில் உள்ள நாடிகள்
விமானத்தின் மேல் உள்ள
9 கலசம் = நவசக்திகள்
5 பீடம் = முமூர்த்திகள் ,
சதாசிவம்
மற்றும் மஹேஸ்வரம்
1000 கால் மண்டபம் = மனித மூளையின் 1000 மடிப்புகள்
கனகசபையின் வெற்றிடம் = அரூவ கடவுளை குறிக்கும்
நடராஜர் சிலை - 5 தொழிலை குறிக்கும்
உடுக்கை => படைத்தல்
கையில் தங்கியுள்ள நெருப்பு => அழித்தல்
அபயகரம் => காத்தல்
முயலகன் => தான் எனும் அகங்காரத்தை
அளித்தால்
உயரே தூக்கிய கால் => சரணாகதி
கண்கள் => சூரியன் சந்திரன்
=========================================================
No comments:
Post a Comment